prasanna gunasena 696x392444 1
செய்திகள்இலங்கை

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

Share

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது

இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் இளைஞர்கள் அக்கறை செலுத்தாதுள்ளனர். இதனால் அவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளாத நிலை காணப்பட்டாலும் , அவர்களால் சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதன் மூலமாக புதிய திரிபுடன் வைரஸ்கள் உண்டாகலாம். அவற்றை தடுப்பூசிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படலாம்.

அவற்றை கருத்து கொண்டே வைரஸ் திரிபுகளின் உருவாக்கத்தைக் குறைக்க உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை செலுத்துமாறு பரிந்துரைத்துள்ளது – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....