IMG 20211030 WA0009
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்!

Share

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றல் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் உலக நாடுகள் தமது பிள்ளைகளை அரசிடமிருந்து மீட்டுத்தர வேண்டும், உலக நாடுகளால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். தற்போதைய அரசில் நம்பிக்கையில்லை. சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பபப்பட்டன.

இந்த போராட்டத்தின்போது, குறித்த இடத்தில் அரச புலனாய்வாளர்கள் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி வெளியிடுகையில்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், அரச புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது..

பறிகொடுத்த எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரியே நாங்கள் போராட்டங்களை மேற்கொ வருகிறோம். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி இப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

போடட்டும் நடைபெறும் அவர்கள் எம்மை படமெடுக்கிறார்கள், வீடியோ எடுக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என நாம் கேள்வி எழுப்ப விரும்புகிறோம். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...