LPL 2020 scaled
செய்திகள்விளையாட்டு

LPL- வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்!

Share

LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப் பதிவுகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளன.

இத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தம் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  ஒவ்வொருவரும் தமது நாட்டின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

அத்துடன், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவராக இருக்கவேண்டும்.  T-20 தொடருக்கான அணியில் இடம்பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாய தகுதியாகும்.

இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் விளையாட உள்ளளர்.

LPL அணியில் பங்கு பெறும் 20 வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பார்களென்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...