sog 2
செய்திகள்இலங்கை

இலங்கையில் முதன்முறையாக அபூர்வ அறுவை சிகிச்சை!

Share

இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது எனவும் இதுவே இலங்கையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் முதல் சத்திர சிகிச்சை எனவும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியுள்ள 5 சென்ரிமீற்றர் அளவிலான கல் மற்றும் வேறு சிறிய சிறிய கற்கள் என்பவை இதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோயாளியை மயக்கமடையச் செய்யாது முதன்முறையாக வெற்றிகரமாக இடம்பெற்ற அறுவை சிகிச்சை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...