24 6665523be31e1
இந்தியாசெய்திகள்

மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

Share

மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தவறான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மோடி மீது நாடாளுமன்ற விசாரணைகளை நடாத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தினால் இந்திய பங்குச்சந்தையில் (Indian Stock Market) பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியப் பங்குச்சந்தை 3.4 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.

இதனையடுத்து, அமித் ஷா (Amit Shah) உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

எனினும், அவர்கள் எதிர்பார்த்தவாறு தேர்தல் முடிவுகளோ பங்குச்சந்தை மாற்றமோ இடம்பெறாது மாறாக பங்குச்சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

மேலும், இது கடந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மோடி அரசாங்கம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தவறான வழிநடத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அழுத்தத்தில் ராகுல் காந்தி, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....