sumanthiran scaled
செய்திகள்இலங்கை

போராட்டத்தில் இணையுங்கள்! – எம்பி சுமந்திரன் அழைப்பு

Share

“இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“எமது கடல் வளத்தையும் நீரியல் வளத்தையும் மிக மோசமாக அழிக்கும் இழுவைப்படகுகள், 2017ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனாலும், கடற்றொழில், நீரியல் அதிகாரிகள் இந்தத் தடையை அமுல்படுத்தாத காரணத்தால் உள்ளூர், வெளிப்பிரதேச மற்றும் வெளிநாட்டு இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தை முற்றாக சூறையாடுகின்றன.

இந்தநிலை தொடருமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கே கடல் வளம் இல்லாது போய்விடும்.

இந்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான எதிர்ப்புப் பேரணி இடம்பெறும்.

இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோருவதே இந்தப் பேரணியின் நோக்கமாகும். அனைத்து மக்களும் இந்த எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றி: இலங்கை எம்.பி. நாமல் ராஜபக்ஷ சமூக வலைதளத்தில் வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிமுகமான முதல் தேர்தலிலேயே சுமார் 108...

world 17
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதித்துறை மீதான வரி உயர்வு: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இலங்கையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வரி வரம்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், வரும் ஜூலை...

world 15
செய்திகள்இந்தியா

தமிழக அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் மாற்றம்: தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்...

world 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை ஊழியர்களுக்கு நஷ்டஈடு: மே 15 முதல் முதற்கட்டப் பணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டு, அதன் பணிகள் புதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ...