sl
செய்திகள்இலங்கை

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு

Share

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான பிரித்தானியா அரசின் தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும். இவ்வாறு பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரத்தியேகமாக தமக்கு அறிவித்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரித்தானியாவில், பயங்கரவாதத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மீளப்பெறுமாறு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பிரித்தானிய அரசு, இந்த தடை தொடர்ச்சியாக அமுலாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் உட்பட அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து போன்றவற்றை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் – என தெரிவித்துள்ளது.

இதேவேளை. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு தொடர்பில் இதுவரை பிரித்தானியா அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 6130f5abb5592

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...