ida
செய்திகள்உலகம்

தென் அமெரிக்காவில் ஐடா புயல் – 41 பேர் பலி

Share

தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது.

புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக
அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது, ​​நியூயோர்க் நகரத்தில் 80 மிமீ மழையை பொழிந்துள்ளது.

அங்கு சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய ஐடா புயல் காரணமாக குறைந்தது 41 பேர் பலியாகிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் குறைந்தது 23 பேர் நியூஜெர்சியில் வசிப்பவர்கள் என்று கவர்னர் பில் மர்பி அறிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தமது வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

இதேவேளை, நியூயோர்க்கில் குறைந்தது 14 பேர் தமது அடித்தள குடியிருப்பில் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கனெக்டிகட்டில் ஒருவரும், பென்சில்வேனியாவின் பிலடெல்பியா அருகே மூன்று பேரும் இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood flood3 flood4 floodd

source : Storm Ida death toll climbs to 41 across four states as floods continue – BBC News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...