power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

Share

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாலை 4.30 மணிக்கு பின்னரே மின்விநியோகம் பகுதி பகுதியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

மின்சார தடை காரணமாக ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்தன.

தொலைத்தொடர்பு வரிசைகள் செயலிழந்து காணப்பட்டதுடன், சீரின்றியும் காணப்பட்டன.

நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை , துணை மின் நிலையங்களின் ஊடாக 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...