Train
செய்திகள்இலங்கை

ரயில் சேவையை நாடும் மக்கள்! – கட்டணமும் அதிகரிக்கிறது

Share

பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது.

தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு கிலோமீற்றர் வரையில் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சிலர் சைக்கிள்களை பயன்படுத்திவருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ரயில் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...