Sanakkiyan
செய்திகள்அரசியல்இலங்கை

சுயநலனுக்காகவே அங்கஜன் போன்றவர்கள் அரசியலுக்கு! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

Share

“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த பங்காளிக்கட்சிகள்கூட, அரசை விமர்சித்து வருகின்றன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

ஆனால் வடக்கு, கிழக்கில் இருந்து வந்து அரசுடன் இருப்பவர்கள் , மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்சம் கண்டன அறிக்கையொன்றையாவது விடுவதில்லை. இதன்மூலம் மக்களுக்காக அல்ல தமது இருப்புக்காகவும், சுயநலனுக்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...