vv2
செய்திகள்இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தல் – வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் – பொலிஸ், இராணுவம் குவிப்பு

Share

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளும் முகமாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வாகனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடைப் பயணத்தை ஆரம்பித்து அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vv4 vv3 vv2 vv1 vv

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...