pukai
செய்திகள்உலகம்

புகைப்பிடிப்பவர்களே அவதானம்!

Share

புகைப்பிடிப்பவர்களே கொரோனாவால் அதிக இறப்பினை சந்திக்க நேரிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இவ் ஆய்வை முன்னெடுத்திருந்தனர்.

இவ் ஆய்வுக் குழுக்களானது இணைந்து முதன்மை பராமரிப்பு பதிவுகள், கொரோனா சோதனை முடிவுகள், மருத்துவமனை சேர்க்கை தரவு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தியிருந்தது.

குறித்த ஆய்வில் புகைப் பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைபிடிப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 80 சதவிகிதம் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும், கணிசமாக கொரோனாவால் இறப்பவர்களில் பலர் புகைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ் ஆய்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிஃப்ட் கருத்து தெரிவிக்கையில்,

புகைபிடிப்பதனால் நீங்கள் கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். மேலும் புகைபிடித்தல் இதய நோய்,  புற்றுநோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களை வரவழைக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...