suksh
செய்திகள்இலங்கை

வடக்கு கிழக்கு கிளர்ந்தெழும்!! – சுகாஷ் எச்சரிக்கை

Share

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடருமாயின், வடக்கு கிழக்கு கிளர்ந்தெழ வேண்டி ஏற்படும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்குள் அடாவடியாக பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதுடன், அவர்களில் இருவரை முட்டுக்காலில் இருத்திவைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்திய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் வடக்கும் கிழக்கும் கொரோனாவைத் தாண்டியும் கிளர்ந்தெழும்.

யாருக்கும் தெரியாமல் கொரோனாக் காலத்தில் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – என்றுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...