mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்த தலை குறிவைப்பு!

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

நம்பிக்கையில்லாப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பலம் அரசாங்கம் வசம் இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளை பட்டியலிட்டு காட்டும் நகர்வாகவே இப் பிரேரணை முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், பிரேரணை கொண்டுவந்தால்கூட அதனை ஜனவரி மாதமளவிலேயே விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடன்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...