IMG 20211207 WA0081
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் ஊடகவியலாளர்களாக மாறிய கடற்படை!!!

Share

மாதகலில் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படும் மக்களுக்கும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் தொடரந்து அச்சுறுத்தல் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் மாதகல் பகுதி மக்கள், கஞ்சா கடத்திய சந்தேகத்தில் நேற்றைய தினம் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை அங்கு நின்ற நபர் ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த மக்கள் அவரை நோக்கி “நீங்கள் யார் எதற்கு தங்களை காணொளி எடுக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தான் ஒரு ஊடகவியலாளர் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளர் என்றால் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினர். இருந்தும் அவர் அடையாள அட்டையை காண்பிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...