1605415571 namal 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் – பஸில் மோதலா? 

Share

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

பிரதமர் பதவிக்காகவே இந்த மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் ஆளுங்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன எனவும் கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சில சம்பவங்களும் அரசுக்குள் இடம்பெற்றுவந்தன. இரு வேறு இடங்களில் ஊடக சந்திப்புகள்கூட நடத்தப்பட்டன.

ஆனால் பஸிலும், நாமலும் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருப்பதாகவும், இருவரும் தினமும் சந்தித்து திட்டங்களை வகுத்துவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சிலவேளை அரசுக்குள் இருக்கும் கறுப்பாடுகளைக் கண்டறிவதற்காக ராஜபக்ச குடும்பம் தரப்பில் இவ்வாறானதொரு அரசியல் வியூகம் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...