mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை: விவசாய அமைச்சர்

Share

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, ” விவசாயிகளால் பயிரிடப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு வனவிலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர்,

” இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப்பொருட்களில் 45 முதல் 50 வீதமானவை வன விலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன.

காட்டு யானைகளால்தான் பெரும் பாதிப்பு. எனவே, யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென தனி அமைச்சே உருவாக்கப்பட்டுள்ளது.

குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை. வீடொன்றில் மிளகாய் செடி ஒன்றைக்கூட விட்டு வைப்பதில்லை. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. வெளிநாடுகளில் கையாளப்படும் முறைமைகள் குறித்தும் கண்காணிக்கப்படுகின்றது.

போக்குவரத்தின்போது அழிவு ஏற்படுகின்றது. எனவே, ரயில்கள் மூலம் விவசாய உற்பத்திகளை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...