modi
செய்திகள்உலகம்

இத்தாலியில் மோடிக்கு அமோக வரவேற்பு

Share

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்றவேளையில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கபட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி சர்வதேச பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார் .

விமான நிலையத்தில் அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் வாழும் இந்தியர்கள் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தியபடி பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன் எனவும் இம் மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய வி‌ஷயங்கள் விவாதிக்கப்படும்.

ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் இன்றிலிருந்து 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகிறார் .

கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரையும் வாத்திகனில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அத்தோடு இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...