1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

மருதனார் மட வாள்வெட்டு- கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Share

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி மருதனார் மட சந்தியில் பழக்கடை நடாத்தும் 04 பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று (26) நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பநிலையில் எதிர்வரும் 06 திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற சிலர் வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...