IMG 20211221 WA0022
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் இலத்திரனியல் பொருட்களை திருடிய நபர் கைது!

Share

வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 43” தொலைக்காட்சி, சீடி பிளேயர் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன களவாடப்பட்டிருந்தன.

குறித்த இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த போது சந்தேகநபரும், விற்பனை செய்ய உதவிய தரகரம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் அச்சுவேலியில் வசித்து வருவதோடு, கடந்த 10 ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஒருவரை தாக்கி மோதிரத்தை பறித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 3 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...