Mannar
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோந்தைப்பிட்டி கடலில் மாயமான மீனவர்கள் சடலமாக மீட்பு!

Share

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 02 வது மீனவரும் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடலமானது தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் படகொன்றில் பயணித்துள்ளனர். இதன்போது, மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர்.

குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர். படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்துள்ளது.

இதன்போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

எனினும் இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் மீனவர்கள் கடலில் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் என்பவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...