ரணிலிடம் கோட்டா
அரசியல்இலங்கைசெய்திகள்

இரு மாதங்களுக்குள் ’21’ – ரணிலிடம் கோட்டா உறுதி

Share

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டதாக 21 ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதன்படி தற்போது புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பு திருத்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி இது தொடர்பில் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

புதிய அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...