namal
இலங்கைசெய்திகள்

மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி

Share

மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி

மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை திறப்பதற்கு ஒரு நிமிடமுள்ளபோது மதுக்கடைகள் நிரம்பி வழிந்தால் அதனைத் தாண்டி நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்’ என்பதனை இரண்டு முறை யோசிக்க வேண்டும்.

மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக பிழையான தகவல்கள் பரவியுள்ளன. அரசாங்கமோ, கொரோனா தடுப்பு குழுவோ இத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனாத் தொற்றை குறைக்கும் நோக்கிலேயே கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொள்ளும்.

எவ்வளவு பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலிருந்தாலும், கூலி வேலைகள் இல்லை என்றாலும் மதுக்கடைகளை திறந்தவுடன் நீண்டவரிசையில் மக்கள் நிரம்பி வழிந்ததை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...