WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

9 ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு! – அநுர தெரிவிப்பு

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 9 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். கோட்டா, ரணில் அரசை விரட்டுவதே இதன் நோக்கம். அதற்கு கூட்டு ஆதரவை கோரினர். நாம் ஆதரவை வழங்க தயார்.” எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...