WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

9 ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு! – அநுர தெரிவிப்பு

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 9 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். கோட்டா, ரணில் அரசை விரட்டுவதே இதன் நோக்கம். அதற்கு கூட்டு ஆதரவை கோரினர். நாம் ஆதரவை வழங்க தயார்.” எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...