GMOA
இலங்கைசெய்திகள்

வீண்விரயமாகும் அரசின் செலவுகள்!! – சுகாதார ஊழியர் சங்கம்

Share

நாட்டில் சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தில் பாதியளவு கூட அதன் சரியான இலக்குகளை எட்டவில்லை என சுகாதார ஊழியர் சங்கம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சுகாதார ஊழியர்களின் அல்லது சுகாதார சேவையின் தவற00 அல்ல, மாறாக சுகாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் தலைமையின் தவறே என சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறியுள்ளது.

“அரசு 100 உள்ளீட்டுகளை சுகாதாரப் பாதுகாப்புக்கு செலவழித்தால், 50 சதவிகிதம் கூட சுகாதாரப் பாதுகாப்பின் இலக்குகளை எட்டாது.”

சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைக்கு மேற்கொள்ளப்படும் இடையூறுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் தொழில் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

“சுகாதாரம் விற்கப்படுகிறதா, இலாபமா இல்லையா, போதுமான ஊழியர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பது முக்கியமல்ல. அரசியல்வாதிகள் என்ற ரீதியிலும் அரசு என்ற ரீதியிலும் சுகாதாரம் போன்ற சேவைகளில் தலையிடுவதை நிறுத்துங்கள். அரசியல் நோக்கங்களுக்காக நபர்களை இதில் உள்நுழைக்கின்றார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக பதவி உயர்வுகளை வழங்குவதை நிறுத்துங்கள். தமக்குத் தேவையானவர்களை சுகாதார செயலாளராக ஆக்குவதை நிறுத்துங்கள்.”

அரசியல் சார்பு அடிப்படையில் சுகாதார சேவைக்கு நியமிப்பதை அனுமதிப்பதை நிறுத்தி சுகாதார சேவைக்கு ஒரு முறைமையை வழங்கினால், சுகாதார சேவைக்கு ஆகும் செலவில் ஐம்பது சதவீதத்தை சேமிக்க முடியும் என தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார். .

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இலங்கையில் சுமார் 200 மருந்துகளை உற்பத்தி செய்த போதிலும், அதே 200 மருந்துகளை அரசாங்கம் போட்டி விலையில், கூடுதல் விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...