GMOA
இலங்கைசெய்திகள்

வீண்விரயமாகும் அரசின் செலவுகள்!! – சுகாதார ஊழியர் சங்கம்

Share

நாட்டில் சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தில் பாதியளவு கூட அதன் சரியான இலக்குகளை எட்டவில்லை என சுகாதார ஊழியர் சங்கம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சுகாதார ஊழியர்களின் அல்லது சுகாதார சேவையின் தவற00 அல்ல, மாறாக சுகாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் தலைமையின் தவறே என சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறியுள்ளது.

“அரசு 100 உள்ளீட்டுகளை சுகாதாரப் பாதுகாப்புக்கு செலவழித்தால், 50 சதவிகிதம் கூட சுகாதாரப் பாதுகாப்பின் இலக்குகளை எட்டாது.”

சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைக்கு மேற்கொள்ளப்படும் இடையூறுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் தொழில் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

“சுகாதாரம் விற்கப்படுகிறதா, இலாபமா இல்லையா, போதுமான ஊழியர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பது முக்கியமல்ல. அரசியல்வாதிகள் என்ற ரீதியிலும் அரசு என்ற ரீதியிலும் சுகாதாரம் போன்ற சேவைகளில் தலையிடுவதை நிறுத்துங்கள். அரசியல் நோக்கங்களுக்காக நபர்களை இதில் உள்நுழைக்கின்றார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக பதவி உயர்வுகளை வழங்குவதை நிறுத்துங்கள். தமக்குத் தேவையானவர்களை சுகாதார செயலாளராக ஆக்குவதை நிறுத்துங்கள்.”

அரசியல் சார்பு அடிப்படையில் சுகாதார சேவைக்கு நியமிப்பதை அனுமதிப்பதை நிறுத்தி சுகாதார சேவைக்கு ஒரு முறைமையை வழங்கினால், சுகாதார சேவைக்கு ஆகும் செலவில் ஐம்பது சதவீதத்தை சேமிக்க முடியும் என தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார். .

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இலங்கையில் சுமார் 200 மருந்துகளை உற்பத்தி செய்த போதிலும், அதே 200 மருந்துகளை அரசாங்கம் போட்டி விலையில், கூடுதல் விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...