IMG 20220402 WA0020
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு!

Share

நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் இன்றையதினம் மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை வங்களாவடி நகரமும் நவீனமயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.

அபிவிருத்தி செய்யப்பட்ட தீவகத்தின் மையமான வேலணை பிரதேசத்தின் வங்களாவடி நகரத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அபிவிருத்தி செய்யப்பட்ட வங்கயாவடி நகரம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...