21 9
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா

Share

இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா

இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்தனர்.

தூதுக்குழுவில் அமெரிக்க அபிவிருத்தி முகமையின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான துணைச் செயலாளர் ரொபேட் கப்ரோத் ஆகியோர் அடங்குவர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...