22 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்

Share

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்

நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும் தான் காரணம் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளரும், மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான புபுது ஜயகொட (Pubudu Jayagoda)இன்று (9) தெரிவித்தார்.

இலங்கையில் தேங்காய் ஏற்றுமதி 800 மில்லியனில் இருந்து 1,400 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு லயன்ஸ் கழகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே புபுது ஜயகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 3,100 மில்லியன் தேங்காய் விளைச்சல் இடம்பெறுவதாகவும், இந்த ஆண்டு சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைந்தது பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு சுமார் 2,100 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த ஜயகொட, எஞ்சிய தேங்காய் அறுவடையில் சுமார் 800 மில்லியன் தேங்காய் நாட்டின் பாவனைக்காகப் பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேங்காய் ஏற்றுமதி செய்வதன் மூலம் தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், தேங்காய் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு ஆண்டுதோறும் 400 முதல் 600 மில்லியன் டொலர்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைவடைந்துள்ளமை குறுகிய காலப் பிரச்சினையல்ல எனத் தெரிவித்த புபுது ஜயகொட, நாட்டில் தென்னை விளைச்சலைப் பாதிக்கும் பல நீண்டகால விளைவுகள் காணப்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...