jaffna univercity
இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

Share

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்றின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ் விழாவானது அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 7ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தவர் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் பரவலடைந்துவரும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தி பட்டங்களை உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....