jaffna univercity
இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

Share

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்றின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ் விழாவானது அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 7ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தவர் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் பரவலடைந்துவரும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தி பட்டங்களை உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...