24 663c40901a4de
இலங்கைசெய்திகள்

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

Share

டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளது.

சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைச்சராக பதவி வகித்து மக்களின் வரிப் பணத்தை நீண்ட காலம் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக வலியுறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் டயனாவிற்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட உள்ளன.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை, மக்கள் வரிப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட உள்ளது.

டயனா இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...