24 66062e5a107da 1
இலங்கைசெய்திகள்

பசில் ராஜபக்சவை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர்

Share

பசில் ராஜபக்சவை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர்

எந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பசில் ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தை தற்போது பொறுப்பேற்க தயார் என குறிப்பிடும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு ஓடி ஒளிந்ததை மறந்து விடக் கூடாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் தோற்றுவிப்போம்.அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவே மைத்திரிபால சிறிசேன,ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை தவறாக வழிநடத்தினார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....