Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

Share

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித் குமார். திரையுலக பிரமாண்டங்களை பின்னுக்கு தள்ளி, தனது heart beat ஆக இருப்பது ரேஸிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தற்போது, அவரது ரேஸிங் அணி, உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் மிகச் சிறந்த புரட்சியை செய்துள்ளது. “க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப்” போட்டியில் “Pro-Am” பிரிவில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.

க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் என்பது ஐரோப்பா வட்டாரங்களில் மிகப்பெரிய கார் ரேஸிங் போட்டிகளில் ஒன்றாகும். இதில் பங்கு பெறுவதே ஒரு சாதனை. அந்தவகையில் அஜித் குமார் அணியின் வெற்றி, இந்தியாவின் ரேஸிங் வரலாற்றையே தொட்டெழுப்பும் அளவுக்கு பேசப்படுகிறது.

இந்த வெற்றி மூலம் அஜித் குமாரின் புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. திரைத்துறையை தாண்டி, இந்தியாவை உலக ரேஸிங் மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் எடுத்திருக்கும் புது வழி இது. இத்தகவல் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...