Jeevan Thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணை: இ.தொ.காவுக்குள் இழுபறி!

Share

அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் இறுதி முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர், மக்களின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் நடுநிலை வகிப்பதே சிறந்தது, அந்த முடிவை இ.தொ.கா. மாற்றினால் அது எதிர்கால அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மற்றுமொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் உறுதியான – இறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரசுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி தம்முடன் பேச்சு நடத்தும்போது, தமது தரப்பு கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...

world 59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீவு முழுவதும் 2,000 அதிகாரிகள் களத்தில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...