karthinal
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

உண்மை அம்பலமாவதைத் தடுக்க முடியாது: பேராயர்

Share

ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு திட்டமிடப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் வெளிவரும்.

ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க இயலாது. ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்தே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் இந்தியாவின் உளவு அமைப்பான ரோ அமைப்பு வழங்கிய தகவல்கள் சிலவற்றை, உள்நோக்கம் கொண்ட சக்திகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளன என்பதும் புலனாகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுப்பதற்கு சில அதிகாரிகள் முயன்றார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் அதனை ஆழமான புதைகுழிக்குள் தள்ளிவிட்டனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...

world 176
செய்திகள்உலகம்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி: 80 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்தை அறிவித்தார் அஜய் பங்கா!

நீடித்த உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவும் நோக்கில்,...