patali champika ranawaka
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்கும் பயணத்தில் கூட்டமைப்பும் இணைய வேண்டும்! – சம்பிக்க அழைப்பு

Share

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லவர்கள் உள்ளனர். நாட்டை மீட்பதற்கான பயணத்தில் அவர்களும் இணைய வேண்டும்” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது. ஜுலை முதல் வாரமளவில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால், அதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீராது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் நகர்வுகள் தோல்வி அடைந்தால், நாட்டை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நாம் தயார்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளில் நல்லவர்கள் உள்ளனர். அவர்களும் நாட்டை மீட்பதற்கான பயணத்தில் இணைய வேண்டும். நபர்கள் முக்கியம் அல்ல. நாடுதான் முக்கியம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...