sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை: கூட்டமைப்பு இன்னமும் முடிவில்லை!

Share

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றுதான் எம்மால் இப்போதைக்குப் பதில் தர முடியும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அப்பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று முடிவெடுக்கும்” என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

இதேவேளை, அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு ஆகியன இன்று அறிவித்துள்ளன.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில எம்.பி. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...