wimal
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசில் விமலைப் பிரதமராக்க முயற்சி!

Share

இடைக்கால அரசில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைப் பிரதமராக்க அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு முயற்சி எடுத்துள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்து சர்வகட்சி இடைக்கால அரசு அமைந்தால் அதில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவசன்சவின் பெயரைப் பரிந்துரைக்க அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சுயாதீன எம்.பிக்கள் குழுவில் ஒரு பிரிவினர் விமலைப் பிரதமராக்க அனைத்து வழிகளிலும் முயன்று வருகின்றனர். எனினும், இது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று எமக்குத் தெரியவில்லை.

ஆனால், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முதலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியினரும் சுயாதீன எம்.பிக்கள் குழுவினரும் ஓரணியில் உறுதியாக நிற்கின்றனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...