202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புலிகள் தாக்குகின்றனர்! – அம்பாறையில் 7 பேர் கைது

Share

” விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்..” என அம்பாறை நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு வந்து, கிராமவாசிகளை அச்சுறுத்தினர் எனக் கூறப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“புலிகள் தாக்குகிறார்கள்” என கூச்சலிடும் சத்தம் கேட்க, மின் வேலியை பாதுகாக்கும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை அச்சமுற்ற கிராமவாசிகள் பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கமான 119 தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்பாறை மற்றும் அரந்தலாவ பொலிஸ் விசேட படைப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் வந்து பொலிசாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.

திவுலான காட்டுப் பிரதேசத்துக்குள் மறைந்திருந்த போது, சந்தேக நபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...