Ranil
இலங்கைஅரசியல்செய்திகள்

வேறு வழியே இல்லை: ரணில் அதிரடி

Share

பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் 06 நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளில் எந்த நாட்டுக்கும் பாதிப்பான மற்றும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் எதனையும் நிதியம் விதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி இருக்கும் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று டொலர் நெருக்கடி தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், கடனுதவியை வழங்கும் போது, நிறைவேற்ற முடியாத மற்றும் பாதிப்பான நிபந்தனைகளை விதிக்காது என எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...