31
இலங்கைசெய்திகள்

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

Share

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

நாட்டின் எல்லையை இந்தியாவிற்கு விற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”இந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்று அழைக்கப்படுபவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும், நாட்டின் எல்லை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இன்று தேசபக்தர்கள் எங்கே? தேசிய வளத்தை காப்பாற்ற வேண்டும் என்று பேசியவர்கள் இன்று எங்கே?

இலங்கை வரலாற்றில் 2.7 மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளது. ஊழலைப் பற்றிப் பேசுபவர்களுக்கு ஊழலுக்கு துணைபோகும் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பெயர் நினைவில் இல்லை.

இங்கு திசைகாட்டி கூட்டணிக்கு ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் அவரது ஊழல்களை பகிரங்கப்படுத்துங்கள்.

வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்கள் குறித்து கடந்த ஆண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுவரையில் திரான் தொடர்பில் இலஞ்சஊழல் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.” என்றார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....