31
இலங்கைசெய்திகள்

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

Share

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

நாட்டின் எல்லையை இந்தியாவிற்கு விற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”இந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்று அழைக்கப்படுபவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும், நாட்டின் எல்லை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இன்று தேசபக்தர்கள் எங்கே? தேசிய வளத்தை காப்பாற்ற வேண்டும் என்று பேசியவர்கள் இன்று எங்கே?

இலங்கை வரலாற்றில் 2.7 மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளது. ஊழலைப் பற்றிப் பேசுபவர்களுக்கு ஊழலுக்கு துணைபோகும் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பெயர் நினைவில் இல்லை.

இங்கு திசைகாட்டி கூட்டணிக்கு ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் அவரது ஊழல்களை பகிரங்கப்படுத்துங்கள்.

வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்கள் குறித்து கடந்த ஆண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுவரையில் திரான் தொடர்பில் இலஞ்சஊழல் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.” என்றார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...