Elephant attack01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயம்!

Share

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

Elephant attack

இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சென்ற துவிச்சக்கரவண்டியை யானை மிதித்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதி வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் போது, இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...