new photo e1649743324960
அரசியல்இலங்கைசெய்திகள்

7 ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசுக்கெதிரான போராட்டம்!!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி கடந்த 6 நாட்களாக காலி முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இளைஞர், யுவதிகள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள், சமூக நலன் விரும்பிகள் என அனைத்து மக்களும், இன, மத, மொழி கடந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆர்ப்பட்டத்தில் பங்குபற்றுவோர் தங்குவதற்கென காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என தேவையான உதவிகளும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று தமிழ் – சிங்கள புத்தாண்டு நாளிலும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது. போராட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் பலகாரங்களும் வழங்கப்பட்டன.

‘கோட்டா கோ கம’ என்னும் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில், 7 ஆவது நாளாக அரசுக்கெதிரான கோஷங்களுடன் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...