dalasRER
இலங்கைசெய்திகள்

ரஞ்சனுக்கு கிடைத்த தண்டனைகள் அதிகம் – டலஸ் அழகப்பெரும

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட இரண்டு தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு மேலதிகமாக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இது ஒரு குடிமகனுக்கு வழங்கக்கூடிய கடுமையான தண்டனை என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து போன்ற இரண்டு தண்டனைகள் கிடைப்பது மிகவும் கடுமையானது.

இதற்கு மேலும் அவரை தண்டிக்க ஜனாதிபதி கருதக்கூடாது. மேலும் அவரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்காது நல்ல விதமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...