MediaFile 13
செய்திகள்இலங்கை

நாடே ஒன்றாக: 3 மாதங்களில் 77,000 பேர் கைது! ஒரு டன்னுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

Share

இலங்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நாடே ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த சில மாதங்களில் பாரிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 77,824 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 77,105 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய போதைப்பொருட்களில் 1,280 கிலோகிராம் மற்றும் 956 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 320 கிலோகிராம் 741 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2,341 கிலோகிராம் மற்றும் 523 கிராம் கஞ்சா, 132,561 போதை மாத்திரைகள் 155 கிலோ குஷ், 44 கிலோ ஹாஷிஷ் மற்றும் 146 கிலோ மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், மேலதிகமாக 5,568,583 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் 1,582 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 68 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையான 1,449 நபர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...