rohitha
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய கூட்டணியால் பாதிப்புகள் இல்லை!

Share

புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உதயத்தால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எமது பயணம் தொடரும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” கட்சி ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயம். அதனை யாரும் செய்யலாம். ஆனால் கட்சிக்கான பரந்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதே சவாலுக்குரிய விடயம். அந்த கட்டமைப்பை எமது மொட்டு கட்சி செய்துள்ளது.

புதிய கட்சியை – கூட்டணியை ஆரம்பிப்பவர்கள் தேசிய தேர்தலொன்றின்போது பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆகவேண்டும். எனவே, தவறான வழியில் சென்றவர்கள் மீள வரலாம். எமது சலூன் கதவு திறந்தே உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...