120562259 g.l.peiris
இலங்கைசெய்திகள்

சர்வதேசம் ஒருபோதும் நம்பப்போவதில்லை!

Share

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்திலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாம் இதுவரை காலம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே மீறப்பட்டுள்ள நிலையில், எதிர்காலம் குறித்து இலங்கை வழங்கும் வாக்குறுதிகளை எவரும் நம்பப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) விசேட கூற்றொன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது எமக்கு ஆதரவாக ஏழு நாடுகள் வாக்களித்திருந்தாலும் கூட, இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடுகளாக கருதும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

அதேபோல் ஆசிய நாடுகள் எப்போதுமே எம்முடன் இருந்தனர். ஆனால் இம்முறை இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த மாற்றங்களுக்கு காரணம் என்னவென நாம் ஆராய வேண்டும்.

குறிப்பாக நாம் கம்பீரமாக கொடுக்கும் வாக்குறுதிகளை இலகுவாக மீறுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும். பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றுவோம், அடிப்படை பிரச்சினைகளில் மாற்றங்களை கொண்டுவருவோம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதற்கொண்டு சகலரும் வாக்குறுதிகளை வழங்கியும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ளோம்.

அதுமட்டுமல்ல உண்மைகளை கண்டறிய தேசிய பொறிமுறையொன்றை உருவாக்குவோம் என புதிய வாக்குறுதியும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ள நிலையில் இப்போது எதிர்காலம் குறித்து கொடுக்கும் வாக்குறுதியை யார் ஏற்றுக்கொள்ளப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது – என்றார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...