1666598464 dam 2
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.

நீர் போசன பிரதேசங்களுக்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நவீன பலூன் வான் கதவுகளையும் கடந்து அனைத்து வான் கதவுகளிலும் இன்று (25) அதிகாலை முதல் நீர் வான் பாய்ந்து வருகின்றன.

இதே நேரம் ஏனைய நீர்த்தேக்கங்களான விலமசுரேந்திர, கெனியோன், லக்ஸபான, உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதனால் இந்த ஆற்றுக்கு அருகில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மவுசாகலை பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வான் பாயும் அளவினை எட்டி வருகின்றன.

எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் எந்நேரமும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்க பெரும் நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலையகப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

எனவே மண் மேடுகளுக்கு மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறித்தி உள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...