theras
அரசியல்இலங்கைசெய்திகள்

20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்து

Share

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம் உட்பட நாட்டிலுள்ள பிரதான மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

20 ஐ நீக்கிவிட்டு, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த, சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய வகையிலான அரசமைப்பு திருத்தம் அவசியம் எனவும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வு அல்லவெனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...