Vasudeva Wasudeva867989
இலங்கைசெய்திகள்

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

Share

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு விவாதம் இடம்பெறுகிறது.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஒருதலைப் பட்சமாக செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையாகக் காணப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை சாதகமாக பயன்படுத்துகின்றன.

நாட்டில் போர் முடிவுற்றபின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பால் இடம்பெறும் குற்றங்களை அரசின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....